Monday 15 January 2018

சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் என்று எதாவது உண்டா?

சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி அடிப்படையாக இருப்பதால், அதிலிருந்துதான் சமூக முன்னேற்றத்திற்கான புறவயக் கோட்பாட்டைக் காண நாம் முயல வேண்டும். இதனை அளவுகோலாகப் பயன்படுத்தி, வரலாற்றுப் போக்கில் எழக்கூடிய வித்தியாசங்களை மதிப்பிடவும், சமுதாயம் அடைந்து விட்டிருக்கிற வளர்ச்சி மட்டத்த் தீர்மானிக்கவும் முடியும்.

உற்பத்தி வளர்ச்சி என்பது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதால், பொருள்முதல்வாத வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து அவசியமாக எழுவது என்னவென்றால், சமூக முன்னேற்றத்திற்கான மிக உயர்ந்த புறவயமான கோட்பாடுகளை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில்தான் காணவேண்டும், என்பதாகும்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மனிதகுலம், சமூக முனனேற்றக் கட்டங்கள் மூலமாக முன்னேற ஆணிவேராகும். ஏனெனில், இதுதான், அவற்றை அவனுடைய சேவைக்காகப் பயன்படுத்துவதில் அவன் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைக் காட்டுவதாகவும் இருக்கிறது. மனிதகுலத்தின் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்பு வசதிகளைத் திறந்து காட்டுவதாகவும் உள்ளது.

இந்தக் கோட்பாடு புறவயமானது. ஏனெனில், இதனைப் பயன்படுத்தி, சமூக வளர்ச்சி மட்டப்படிகளில், சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தைத் தீர்மானிக்க உதவுவதாக இருக்கிறது.”

(வரலாற்றுப் பொருள்முதல்வாதம்  - பக்கம் - 477)

No comments:

Post a Comment