Thursday 3 October 2019

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானிக்கிறதா? (மாசேதுங் கருதுத்து - ஒரு பார்வை)


மாசேதுங்:-
“உற்பத்தி சக்திகளும், நடைமுறையும், பொருளாதார அடித்தளமும், உண்மையில் முதன்மையான நிச்சயமான பங்கையே வகிக்கிறது. இதை மறுக்கக் கூடியவர்கள் பொருள்முதல்வாதிகளாக இருக்கமுடியாது. ஆனால், குறிப்பிட்ட நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் போன்ற கூறுகள் முதன்மையான தீர்மானகரமான பாத்திரமாக மாறி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன என்பது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (.. theory and the superstructure in turn manifest themselves in the principal and decisive role. )

உற்பத்தி உறவுகளில் மாற்றமேதும் இல்லாமல், உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியுற முடியாமல் இருக்கும்போது, உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம் முதன்மையான, தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது. "புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட் சிகரமான இயக்கம் இருக்க முடியாது” என லெனின் கூறிய காலத்தில், புரட்சிகர கோட்பாடு உருவாக்கமும், அதற்காக வாதாடுவதுமே முதன்மையான தீர்மானகரமான பங்கை வகித்தன. ஒரு கடமை (எத்தகையதொன்றானாலும் கூட) நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கைகளோ உருவாக்கப்படுவதுதான் முதன்மையான தீர்மானகரமான கூறாகும்.

அதேபோன்று, அரசியல்-பண்பாடு முதலிய மேல்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையானவையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இப்படிச் சொல்லும் போது நாம் பொருள் முதல்வாதத்திற்கு முரணாகச் செல்கிறோமா? இல்லை. ஏனெனில், வரலாற்றின் பொது வளர்ச்சியில் சடப் பொருட்களே சிந்தனையைத் தீர்மானிக்கிறது; சமூக வாழ்வு - சமூக உணர்வை நிச்சயிக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில், சிந்தனை என்பது சடப் பொருளின் மீதும்; சமுதாய உணர்வு என்பது சமுதாய வாழ்வின்மீதும்; மேல்கட்டுமானம் என்பது பொருளாதார அடித்தளத்தின் மீதும் பிரதிபலிப்பதை நாம் ஏற்று கொள்கிறோம். உண்மையில் அதை நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இது, பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, எந்திரவியல் பொருள் முதல்வாதத்தைத் தவிர்த்து, இயங்கியல் பொருள் முதல்வாதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.”
(முரண்பாடு பற்றி- 4 முதன்மை முரண்பாடும் ஒரு முரண்பாட்டின்
முதன்மைக் கூறும்
மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1- 467-468)


அரசியல், பண்பாடு போன்றவை மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பொழுது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாறுதல்கள் முதன்மையானதாகவும் தீர்மானகரமானதாகவும் ஆகின்றன என்கிறார் மாவோ. இங்கே மாவோ பொருளாதார அடித்தளம் மேற்கட்டமைப்பின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, கூடுதலாக குறிப்பிட்ட நிலைமைகளில் கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் தீர்மானகரமான பாத்திரமாக வெளிப்படுத்துவதாகவும் கூறிவிடுகிறார்.

இந்த விளக்கம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானகர பாத்திரம் வகிப்பதாக பொருள்கொள்ள வைத்திடுகிறது. பல மார்க்சிய எழுத்தாளர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படைகளில் இருந்து விலகுகின்றனர்.

குறிப்பிட்ட நிலைமைகளில் மேற்கட்டமைப்பு தீர்மானகரமான பாத்திரம் ஆற்றுகிறது என்று மாவோ கூறுகிறார். இது அடித்தளத்துக்கும் மேற்கட்டப்புக்கும் உள்ள இடைத் தொடர்பை பரஸ்வர வினையாற்றுதலாக புரிந்து கொள்வதற்கு முழுமையான இடம் கொடுக்கிறார்.

இன்று பரஸ்பரவினைபுரிதல் என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள், தோழர் மாவோவின் இந்தக் கருத்தைத் தான் முன்நிறுத்துகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அமைப்புகளோ இதனை விவாதித்து எந்த முடிவையும் இதுவரை நிலைநிறுத்தவில்லை. கம்யூனிச நடைமுறைச் சிக்கலுக்கு, இந்த பரஸ்பர வினைபுரிதல் காரணமானதை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. இதனை ஆழமாக விவாதிப்பது அவசியமானதாகும்.

லெனின்:-
"மேற்கட்டுமானம் ஒவ்வொரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி, இதை வரையறுக்காவிட்டால் புரட்சிக் கோஷம் தற்சமயம் பொருளற்ற வெற்றிச் சொல்லாகும்"
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

புரட்சிகர கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்து புரட்சியை ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். அப்போது எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும் எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுக்கிற தீவிரபாத்திரத்தை தீர்மானிக்கும் பாத்திரமாக மாசேதுங் கூறிவிடுகிறார்.  மேற்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்பொழுது அடித்தளம் திறனற்றுபோய்விட்டதாகவும் மேற்கட்டுமானத்தால் அடித்தளத்தை காப்பாற் வேண்டிய சூழல் ஏற்பட்டது போல் மாவோ பேசுகிறார்.

ஆனால் இந்தச் சூழலை மார்க்ஸ்:-
"மூலதனத்தின் ஏக போகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது."
(மூலதனம்I (தமிழ் என்.சி.பி.எச்)பக்கம் 1026-1027)

இங்கு மார்க்ஸ் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து சென்றமையால், முதலாளித்துவ மேற்கட்டுமான மேலோடுகள் அடித்தளத்துக்கு ஒவ்வாததாகிவிடுவதைக் குறிப்பிட்டு, மேலோடு உடைத்தெறியப்படும் என்று கூறுகிறார். அடித்தளத்தின் வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகிப் போனதால் உடைத்தெறியப்படுவதைக் குறிப்பிடுகிறார். அடித்தளம் பலவினப்பட்டு போனதால் மேற்கட்டமைப்பு தீர்மானகரபாத்திரம் எடுக்க வேண்டிய நிலைவந்தது என்று மாசேதுங் கூறுவது போல் மார்க்ஸ் பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடித்தளத்தின் வளர்ச்சி நிலைக்கு, மேற்கட்டமைப்பு பின்தங்கிப் போனதால் மேற்கட்டமைப்பு உடைத்தெறியப்படுகிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்குமான இயக்கவியல் தொடர்பை மறுப்பதின் விளைவே மாசேதுங்கின் கூற்றுக்குக் காரணம்.

மார்க்ஸ் கூறுகிறார்:-
“சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
 (தத்துவவியலின் வறுமை)

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவிற்கும் இயக்கவியல் தொடர்பு இருக்கிறது. இதனை தனித்தனியே பிரிக்க முடியாது.

(இது பற்றி விரிவான ஆய்வுக்கு


No comments:

Post a Comment