Wednesday 8 August 2018

சமூகத்தை அணுகுவதற்கான ஒரு வழிகாட்டியே மார்க்சியம்:-


சமூகத்தைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கிக் கூறுகிறபோது, வரலாற்றைப் படிப்பதற்கான ஒரு வழிகாட்டிதான் மார்க்சியமே ஒழிய, வரலாற்றுப் போக்கையே உருவாக்குவதற்கான ஒரு கருவி, மார்க்கம் அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிட வேண்டும். வரலாற்று ரகசியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய மந்திரக்கோல் அல்ல மார்க்சியம். இந்த நாட்டில் அல்லது அந்த நாட்டில், இந்த அல்லது இன்னொரு கட்டத்தில் நடக்கக் கூடிய வரலாற்றுப் போக்கைக் கணித்து கூறிவிட முடியும் என்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கூறிக் கொள்வது இல்லை.

சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடிய பொது விதிகளை இது படிப்பதுடன், பொதுவாகக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வழிகாட்டியாக உருவாக்குகிறது. அதை அமுலாக்குவது, பிரிட்டனிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், முதலாளித்துவ நாடுகளிலும், சோஷலிச நாடுகளிலும், தொழில்மயமான நாடுகளிலும், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளிலும், மாறுபடலாம். ஏனெனில், அங்குள்ள குறிப்பிட்ட சூழ்நிலையும், நீண்ட முழுமையான வரலாற்றுப் போக்கும், இந்நாடுகளில், அல்லது ஒரு வகையான குழு நாடுகளில் தனித்தனித் தன்மைகளில் வேறுபட்டிருக்கக்கூடும்.
… … … …
வரலாற்றுப் பார்வையில் பொருள்முதல்வாதத்தின் பொருள் என்னவென்றால், சமூகத்தின் பொருளாதார வாழ்வை அங்கீகரிப்பதாகும், முதலில் பொருளாதார உற்பத்தியின் சமூகப் போக்கையும் அதாவது சமூக வாழ்க்கைக்குத் தேவையான இன்னொரு ஆதார விஷயம் என்றல்லாமல், எல்லா சமூகத் தன்மைகளுக்கும் போக்குகளுக்கும் ஊடு இணைப்பாக உள்ள அடிப்படைப் பொருளாதாரமே என்றும், அதுதான் சமூகத்தின் ஆன்மிகப்பிரிவு உள்ளிட்ட இதர எல்லா சமூக வெளிப்பாடுகளுக்கும் இறுதியில் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது என்றும் அங்கீகரிப்பதாகும்.”
 (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-வி.கெல்லி, எம்.கவல்ஸோன்- பக்கம்-37-38)

No comments:

Post a Comment