Monday 22 July 2019

1) பொருளாயதச் செல்வத்தின் உற்பத்தி முறை - சமூக வளர்ச்சியில் பிரதான காரணி – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருதுகோள். மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது சமூகத்தின் தோற்றுவாய்களையும் வளர்ச்சியையும் ஆராய்கின்ற விஞ்ஞானமாகும். சமூகம் என்றால் என்ன, அது எப்படித் தோன்றியது. அது எப்படி முன்னேறுகிறது, அந்த வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற விதிகள் எவை என்ற கேள்விகளை மக்கள் பல நூற்றாண்டுகளாகவே எழுப்பினார்கள். சமூகத் தைப் பற்றிய ஸ்தூலமான விஞ்ஞானங்களாகிய வரலாறு, அரசியல் பொருளாதாரம், சட்டவியல், இதரவற்றிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வேறுபடுகிறது. அது சமூக வளர்ச்சியின் மிகவும் பொதுவான விதிகளை ஆராய்கிறது.

கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அல்லது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருதுகோளை உருவாக்கி சமூகத்தைப் பற்றி அன்றைக்கிருந்த கருத்துகளில் புரட்சியை நிறை வேற்றினார்கள். லெனின் அவர்களுடைய பணியைத் தொடர்ந்தார்.

அதுவரை வரலாறு பகுத்தறிவுக்குப் புறம்பான முறையில் கருத்துமுதல்வாத அடிப்படையில் அறியப்பட்டது. இப்புதிய விஞ்ஞானம் அதை மாற்றி விஞ்ஞான, பொருள்முதல்வாத அறிவைக் கொடுத்தது. மக்கள் தம்முடைய உணர்வு மற்றும் சித்தத்தின் மூலமாக வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் கூறினார்கள், ஆகவே சமூக வளர்ச்சியில் எல்லா மாற்றங்களும் கருத்துகளை, தத்துவங்களைப் பொறுத்திருக்கின்றன என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சமூக முன்னேற்றமும் மக்களினங்களின் வாழ்க்கையும் ஒரு வகையான இயற்கைக்கு மேம்பட்ட தெய்விக சக்திகளினால் இயக்கப்படுகின்றன என்று சில தத்துவஞானிகள் நம்பினார்கள். இந்தச் சக்திகள் மக்களுடைய விதிகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் முடிவு செய்கின்றன என்று அவர்கள் கருதினார்கள். இக்கருத்துகள் அனைத்தையும் கருத்துமுதல்வாதம் கான்றுதான் வகைப்படுத்த முடியும்.

சமூக வளர்ச்சியை ஒருங்கிணைந்த, விதி வழிப்பட்ட நிகழ்வுப் போக்காக விளக்குவதற்குரிய திறவுகோலை மார்க்சியமே தருகிறது. சமூகம் குறிப்பிட்ட விதிகளின் அடிப் படையில் வளர்ச்சியடைகிறது; அவை மக்களது விருப்பங்கள், ஆர்வங்களிலிருந்து சுயேச்சையானவை, அவை இருத் குலையும் இல்லாதிருத்தலையும் பற்றி மனிதனுடைய அறிவிலிருந்து சுயேச்சையானவை, ஆனால் மனிதன் இந்த விதி களை அறிந்தவுடன் அவற்றைத் தன்னுடைய சொந்த நலன்களுக்குச் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறான், மக்கள் பகுத்தறியும் திறனுடையவர்கள். அவர்கள் குறிப் பிட்ட இலட்சியங்களை நிறுவி அவற்றைச் சாதிப்பதற்குரிய மனோவலிமையும் விருப்பமும் உடையவர்கள். அதனால் தான் அவர்களுடைய நடவடிக்கைகள் சமூகத்தின் ஏறுமுக வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துகின்றன.

மக்கள் அரசியல், விஞ்ஞானம், கலைகளை அறிவதற்கு முன்னால் உணவைச் சேகரிப்பது எப்படி, இருப்பிடம் அமைப்பது எப்படி, உடைகளைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக் காட்டினார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மக்களுடைய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகள் அல்லது அவர்களுடைய சமூக இருத்தல் அவர்களுடைய ஆன்மிக, கலாசார, அறிவுத் தேடல்களை, உணர்வு மற்றும் தத்துவங்களை - இவையே சமூகத்தின் அறிவு சார்ந்த வாழ்க்கையாக அமைகின்றன - முன்நிர்ணயிக்கின்றன.

பொருளாய்தச் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற செயல் முறை, மனிதனுடைய உழைப்பு மற்ற எல்லா சமூக நிகழ்வுப் போக்குகளுக்கும் தலைமையானதாக இருக்கிறது. அந்த செயல்முறை நித்தியமாக, இயற்கையான அவசியமாக, மனித சமூகத்தின் இன்றியமையாத நிபந்தனையாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment