Monday 22 July 2019

6) அரசு என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


அரசு. அரசு என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? அரசின் தோற்றமும் அதன் இருத்தலும் வர்க்கங்கள் இருத்தலுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பூர்விகக் கூட்டு வாழ்க்கைச் சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை, அங்கே அரசும் இல்லை. ஆனால் சமூகத்தில் தனியுடைமை தோன்றிய பொழுது, சமூகம் பகைமையான வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்ட பொழுது அரசு உருவாகியது.

பகையியல் சமூகங்கள் எல்லாவற்றிலும் ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற் குரிய பொறியமைவாக அரசு இருக்கிறது. சுரண்டல்காரர் கள் உழைக்கும் மக்களைத் தமக்கு அடிபணியச் செய்வதற் குரிய கருவியாகவும் அது இருக்கிறது. இது சுரண்டல் அரசின் வர்க்க சாராம்சம் ஆகும். சுரண்டல்காரர்கள் தம்முடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ராணுவம், நீதிமன்றங்கள், சிறைகள், தண்டிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றை உபயோகிக்கிறார்கள். அவர்கள் நேரடியான ஒடுக்குமுறை அமைப்புகளை உபயோகிப்பதுடன் எல்லா சித்தாந்த ஒடுக்குமுறைச் சாதனங்களையும் (கல்வி நிலையங்கள், பத்திரிகைகள், வானொலி, திரைப்படங்கள், இதர தகவல் தொடர்புச் சாதனங்களை) உபயோகிக்கிறார்கள்.

சோஷலிசப் புரட்சி சுரண்டல் அரசை அகற்றி விட்டு சோஷலிச அரசைக் கொண்டு வருகிறது. அது கீழே தள்ளப்பட்ட சுரண்டல்காரர்கள் மீது தொழிலாளி வர்க்கத் தின், சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினருடைய ஆதிக்கத்தின் அரசியல் ஸ்தாபனமாக இருக்கிறது. சோஷலிச அரசின் முக்கியமான கடமை ஒடுக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பை, உழைக்கும் மக்கள் மத்தியில் சமத் துவமான சமூக அமைப்பை நிர்மாணிப்பதாகும்.

அரசுக்குப் பல வடிவங்களும் ரகங்களும் உள்ளன. அரசு எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறது என்பதைப் பொறுத்து அதன் ரகம் நிர்ணயிக்கப்படுகிறது, அது அடிமை உடைமையாளர்களுக்குச் சேவை செய்தால் அது அடிமை உடைமை அரசு ஆகும், நிலப்பிரபுத்துவ நிலக்கிழார்கள் அதிகாரத்தை வகித்தால் அது நிலப்பிரபுத்துவ அரசு ஆகும். முதலாளிகள் முதலாளித்துவ அரசை நடத்துகிறார் கள். அரசின் இம்மூன்று ரகங்களிலும் சுரண்டல்காரர் சுளின் ஆட்சி குணாம்சமாகும்; அவர்களது வர்க்க சாராம் சத்தை இவை வெளிப்படுத்துகின்றன்.

சோஷலிசத்தின் நிர்மாணமும் அமைப்பு என்ற முறையில் அதைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் அரசின் புதிய ரகத்தினால், சோஷலிச அரசினால் நிறைவேற்றப்படு இன்றன. புதிய சமூகம் முதலாளித்துவத்திலிருந்து உடனடியாக, நேரடியாக வெளிவருவதில்லை. "... முதலாளித்துவ சமுதாயத்துக்கும் சோஷலிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது; இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது'' என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். (மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் சமூகம், மாஸ்கோ , முன்னேற்றுப் பதிப்பகம், 198.7, பக்கங்கள் 56-57.)

சோஷலிசம் நிர்மாணிக்கப்பட்ட பிறகு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு பொது மக்களுடைய அரசாக, தொழிலாளி வர்க்கம் தலைமையான பாத்திரத்தை வகிக் கின்ற அனைத்து மக்களின் அரசியல் ஸ்தாபனமாக மாற்றமடைகிறது.

அரசின் ரகம் அதன் வர்க்க சாராம்சத்தை எடுத்துக் காட்டுகிறது; அதன் வடிவம் அது எந்த அரசாங்க ரகம் (முடியாட்சி, குடியரசு, இதரவை) என்பதையும் அதன் அரசியல் ஆட்சி முறையையும் (மிதவாத ஜன நாயகம், ராணுவ-பாசிச சர்வாதிகாரம்) அதன் நிர்வாகக் கட்டமைப்பையும் (ஒற்றையாட்சி, கூட்டாட்சி) எடுத்துக் காட்டுகிறது.

முதலாளித்துவ அரசுகள் பல வடிவங்களைக் கொண் டிருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒரே மாதிரி யானதே. அவை அனைத்துமே மூலதன ஆதிக்கத்தின் கருவிகளே. முதலாளித்துவ அரசின் வடிவம் எப்படியிருந் தாலும், அதன் பெயர் எப்படியிருந்தாலும் அதன் சுரண்டு கின்ற சாராம்சத்தை, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற கருவி என்னும் பாத்திரத்தை அதனால் மாற்ற முடியாது. ''முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பல்வேறாக இருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒன்றே. இந்த அரசுகள் எல்லாமே, அவற்றின் வடிவங்கள் எப்படியிருந்தாலும், கடைசிப் பகுப்பாய்வில் தவிர்க்க இயலாதபடி முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகார மாகவே இருக்கின்றன'' என்று லெனின் எழுதினார். (# வி. இ. லெனின், நூல்: திரட்டு, இரண்டாம் பாகம், பக்கம் 2.55,) முதலாளித்துவ அரசு உழைப்பின் மீது மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற கருவியாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment