Monday 22 July 2019

9) வரலாற்றில் பெருந்திரளான மக்களின் பாத்திரமும் தனிநபருடைய பாத்திரமும் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உழைக்கும் மக்கள் பொருளாய்தச் செல்வத்தைப் படைப்பதில் தலைமையான பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவர்கள் உழைப்புக் கருவிகளைச் செய்கிறார்கள், அவற்றை அபிவிருத்தி செய்கிறார்கள், தம்முடைய அனுபவத்தையும் அறிவையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள். உழைக்கும் மக்கள் உலக மக்களுக்கு உணவளிக்கிறார்கள், உடையளிக்கிறார்கள், வாழ்க்கையிலுள்ள சிறந்த பொருட்கள் அனைத்தையும் படைக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி வரலாற்றையும் படைக்கிறார்கள்; ஏனென்றால் அவர்கள்தான் முன்னேற்றத்தின் பிரதான இயக்கு சக்தி. அடிமை உடைமை முறையும் நிலப்பிரபுத் துவமும், தாமாகவே அழிந்து விடவில்லை, ஒடுக்குபவர்களை எதிர்த்து உழைக்கின்ற ஆண்களும் பெண்களும் நடத்திய கடுமையான புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக அவை அழிந்தன. பெருந்திரளான மக்களின் படைப்பாற்றல் ருஷ்யாவில் முதலாளித்துவத்தை ஒழித்து மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சியின் போது குறிப்பிடத்தக்க வேகத்துடன் வெளிப்பட்டது.

மக்கள் பொருளாயதச் செல்வத்தை மட்டுமன்றி பொரு ளாய்தம் இல்லாத, ஆன்மிக, அறிவு மதிப்புகளையும் படைக் கிறார்கள். அறிவியல், இலக்கியம், கலைகள் பெருந்திரளான மக்களுடைய முயற்சிகளினால்தான் வளர்ச்சியடைந்திருக் கின்றன.

வரலாற்றில் தனிமனிதன் வகிக்கின்ற பாத்திரம் என்ன? பெரும்பான்மையினரை ஒடுக்குவதற்கு சிறுபான்மையினரது உரிமையை நியாயப்படுத்துவதற்காக முதலாளித்துவ சித்தாந்திகள் மக்களுடைய உணர்வில் கட்டுப்பாடற்ற கும்பல் மற்றும் ''தலைவர்' என்னும் பிற்போக்கான தத்துவத்தை விதைப்பதற்கு முயல்கிறார்கள். அரசர்கள், ராணுவத் தலைவர்கள், சட்ட கர்த்தாக்கள் ஆகியோரைப் போன்ற தலைசிறந்த மனிதர்களே வரலாற்றைப் படைக் கிறார்கள்; அவர்கள் தம்முடைய விருப்பத்துக்கேற்ப வரலாற்றுப் போக்கைத் திருப்ப முடியும் என்னும் அனு மானத்தை இத்தத்துவம் அடிப்படையாகக் கொண்டிருக் கிறது. உழைக்கும் மக்கள் திரளினர் செயலற்றவர்கள், வரலாற்று ரீதியில் சக்தியற்றவர்கள், கட்டுப்பாடற்ற கும்பல் என்று இத்தத்துவம் காட்டுகிறது.

மனித சமூகத்திலிருக்கின்ற எல்லாமே ஒரு சிலரால் உருவாக்கப்பட்டவை என்ற தத்துவத்தை மார்க்சிய (லெனினியம் தகர்த்து விட்டது. எனினும் வரலாற்றில் தனிநபர் வகிக்கின்ற பாத்திரத்தை மார்க்சிய-லெனினியம் முற்றிலும் புறக்கணிக்கிறது என்பது இதன் பொருளல்ல. மனித சமூக வரலாற்றில் எந்த வர்க்கமும் அதன் மாபெரும் அரசியல் தலைவர்களை உருவாக்காமல், அரசியல் இயக்கத்தை அமைத்து அதற்குத் தலைமை தாங்குகின்ற தகுதியுடைய பிரதிநிதிகள் இல்லாமல் தலைமையான நிலையை ஒருபோதும் அடைந்ததில்லை. மக்களுடைய தேவைகளையும் முன்னுரிமைகளையும் புரிந்துகொண்ட முற் போக்கான தலைவர்கள் சமூகத்திற்கு முன்புள்ள பிரச்சினை களுக்கு மிகச் சிறந்த தீர்வைக் கண்டுபிடித்து அதன் மூலம் வரலாற்று நிகழ்வுப் போக்குகளை விரைவுபடுத்துகிறார்கள். அதற்கு எதிர்மாறாகப் பிற்போக்காளர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளின் வேகத்தைக் குறைக்கிறார்கள், சமூக வளர்ச்சி யைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

தலைசிறந்த மனிதர்கள் பெருந்திரளான மக்களுக்கு, சமூக வர்க்கங்களுக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த வர்க்கங்களும் சமூகப் பிரிவுகளும் தருகின்ற ஆதர வினால் அவர் கள் வலிமை அடைகிறார்கள். இத்தலைவர் கள் எவ்வளவுதான் அறிவாளிகளாக, உண்மையாகவே எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும் இந்த ஆதரவு மட்டும் இல்லையென்றால் அவர்கள் வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சக்தியற்றவர்களாக இருப் பார்கள். பெருந்திரளான மக்களுடைய நடவடிக்கைகளி லிருந்தே தலைவர்கள் தம்முடைய பலத்தைப் பெறுகிறார்கள்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment