Sunday 21 July 2019

8. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிதல் தத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உலகம் அறியப்படக் கூடியதா? மார்க்சிய-லெனினியத் தத்துவம் இக்கேள்விக்கு "ஆம், உலகம் அறியப்படக் கூடியதே" என்ற தெளிவான, விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்ட பதிலைத் தருகிறது. உலகத்தை அறிய முடியும் என்னும் இந்த நம்பிக்கை நடைமுறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

அறிதல் என்பது மனிதனுடைய உணர்வில் எதார்த்தத் தின் பிரதிபலிப்பு ஆகும். நம்மைச் சுற்றியுள்ள உலகமே நம்முடைய அறிதலின் ஒரே தோற்றுவாய் ஆகும். இந்த உலகம் மனிதன் மீது தாக்கம் செலுத்துகிறது; அவனிடம் சில உணர்ச்சிகளை, எண்ணங்களை, கருத்தடைமப்புகளைத் தோற்றுவிக்கிறது; அவன் பின்னர் அவற்றைத் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் சோதித்துப் பார்க்கிறான்.

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மனிதனுடைய நடவடிக்கையே நடைமுறை ஆகும். அது மனிதனுடைய செயலையும் பொருளாயத உற்பத்தியையும் அடிப்படையாகக் கொண் டிருக்கிறது; அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம், தேசிய விடுதலை இயக்கம், அறிவியல் பரிசோதனை ஆகிய வற்றை அது உள்ளடக்கியிருக்கிறது. சுற்றியுள்ள உலகத்தை அறிய முயலுவதன் ஆரம்பம் மற்றும் முடிவுக் கட்டமாக நடைமுறை இருக்கிறது.

இரண்டு பொருட்கள் - அவற்றில் ஒன்று அடுத்த பொரு ளைப் போல நூறு மடங்கு அதிக எடையுள்ளது - ஒரே உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்ற பொழுது அதிக எடையுள்ள பொருள் குறைவான எடையுள்ள பொருளைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்துடன் பூமியில் விழும் என்று மத்திய காலத்தில் சமயவாதிகள் உறுதியாக் கூறினார் கள். கலிலியோ (1564-1642) இக்கருத்து தவறானது என் பதை நிரூபித்தார். அவர் ஒரு உயரமான ஸ் தூபியிலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு உருண்டைகளை கீழே போட்டார். அவை இரண்டும் ஒரே சமயத்தில் பூமியின் மீது விழுந்தன. சமயவாதிகளின் கருத்து தவறானது, கீழே விழுகின்ற பொருட்களின் எடை எப்படியிருந்தாலும் அவை ஒரே வேகத்தைக் கொண்டிருக்கின்றன என்பவற்றை அவர் நடைமுறையில் நிரூபித்தார்.

நடைமுறை அறிதலின் ஆரம்ப நிலையாக, அடிப்படை யாக இருக்கிறது. ஏனென்றால் அறிதல் நடைமுறை நடவடிக் கையிலிருந்து தோன்றுகிறது. உதாரணமாக, மனிதன் தன் னுடைய பிறந்த கால முதலாகவே உழைத்தான்; தன் னுடைய கடுமையான உழைப்பின் போது இயற்கைச் சக்திகளைப் பற்றி அறிந்து கொண்டான், அவைப் பற்றிய அறிவைச் சேகரித்தான்.

அறிதலின் நோக்கமும் நடைமுறையே; ஏனென்றால் மனிதன் உலகத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதும் அதன் வளர்ச்சியின் விதிகளைக் கண்டுபிடிப்பதும் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் அந்த அறிதலின் விளைவு களைப் பயன்படுத்திக் கொள்வதற்கே.

அறிதல் நிகழ்வுப் போக்கு. மனிதன் பிறக்கின்ற பொழுது அவனுடைய தலையில் அறிவு இருப்பதில்லை. அவனுடைய வாழ்க்கையில் அறிதலின் விளைவாக அது சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படுகிறது. மேலும் அறிதல் என்பது மனிதனுடைய மூளையில் உலகத்தைப் பற்றிய தானியக்கப் பிரதிபலிப்பு மட்டுமல்ல, அது ஒரு சிக்கலான நிகழ்வுப் போக்கு; அதில் அவனுடைய சிந்தனைகள் அறியாமையிலிருந்து அறிவை நோக்கி, அரைகுறையான, துல்லியமற்ற அறிவிலிருந்து அதிக முழுமையான, அதிகத் துல்லியமான அறிவை நோக்கி முன்னேறுகின்றன. உலகம் முடிவில்லாததாக இருப்பதால் அறிதலும் கூட முடிவில்லாததே, அறிதலின் கட்டங்கள் எவை?

முதல் கட்டம் புலனுணர்ச்சி அறிதல். மக்கள் தங் சுளுடைய கண்கள், காதுகள், தொட்டறியக் கூடிய உறுப்பு களின் மூலமாக உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள் கிறார்கள். நாம் பொருளாயத உலகத்தைப் பற்றிய தகவலை அவற்றின் மூலமாகப் பெறுகின்றோம்.

அறிதலின் இரண்டாவது கட்டம் தர்க்க ரீதியான அல்லது சூக்குமமான சிந்தனை எனப்படும். எந்த ஒரு நிகழ்வின் சாரத்தையும் அறிவதற்கு நம்முடைய புலனுறுப்பு களின் உதவியினால் பெற்ற தகவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; தகவலை முறைப்படுத்த வேண்டும்; தற் செயலான, அற்பமான விவரங்களை ஒதுக்கி விட்டு முக்கியமானவற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஆனால் நம்முடைய புலனுறுப்புகள் சரியான தகவல் களை அளிக்கின்றன என்று நாம் உறுதியாகக் கருதுவது எப்படி? அந்தத் தகவல் அனுப்பப்படுகின்ற, புரிந்து கொள்ளப் படுகின்ற செயல்முறையின் போது சிதைக்கப்படுதல் சாத்தியமா? அறிதல் செயல்முறையின் மூலம் பெறப்படு கின்ற அறிவு நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட பிறகுதான் முடிவான உண்மை தனக்குக் கிடைத்திருக்கின்ற அறிவுக்குப் பொருத்தமான என்று கருதப்படுகிறது. ஒரு நபர் விளைவை நடைமுறை நடவடிக்கையில் பெறுவாரானால் இந்த அறிவு முடிவான உண்மைக்கு, எதார்த்தத்துடன் பொருந்துகிறது என்பது அர்த்தமாகும்.
            (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment