Sunday 21 July 2019

6. பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள். எதிர் நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகியவை இயக்கவியலின் பிரதான விதிகள் ஆகும்.

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும்

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், இயற்கை, சமூகம் மற்றும் அறிதலின் எல்லா நிகழ்வுகளிலும் அவற்றின் உன் எதிர்நிலைகள், முரண்படுகின்ற அம்சங்கள் மற்றும் போக்குகள் குணாம்சமாக இருக்கின்றன. உதாரணமாக, உயிரற்ற இயற்கையில் ஒரு பக்கத்தில் அணுவின் நேர்ச் சக்திக் கருவுக்கும் மறு பக்கத்தில் அதன் எலெக்ட்ரானுக்கும் இடையில் ஒற்றுமை மற்றும் எதிர்நிலையின் மூலம் இதை விளக்க முடியும்; உயிருள்ள இயற்கையில் இந்த எதிர்நிலை களை! தன்மயமாக்கல் மற்றும் சிதைதலில் விளக்க முடியும்; சமூகத்தில் இவை வர்க்க முரணியல்புகள் எனப்படுகின்றன, சிந்தனையில் இவை பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு எனப்படுகின்றன. இந்த இயக்கவியல் முரண்பாட்டில் ஒரு எதிர் நிலையானது மறு எதிர் நிலை இல்லாமல் இருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எதிர் நிலைகள் ஒரே நிகழ்வுக்குள் இருக்கின்றன; ஒருமையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, தன் பயமாக்கல் மற்றும் சிதைதலில் ஒரு சாதிர்நிலை தன் னுடைய மறு எதிர் நிலையிலிருந்து பிரிந்து விடுவதாகக் கண நேரம் கற்பனை செய்து பாருங்கள். இது உயிருள்ள பொருளைத் தவிர்க்க முடியாதபடி அழித்து விடும், அதாவது அந்த நிகழ்வை அழித்து விடும். அவை பிரிக்கப்பட முடியா தவை: அவை அதே சமயத்தில் சமாதானமான, உடன்பாட்டு முறையில் இருக்க முடியாது, ஏனென்றால் அவை எதிர் நிலை கள், அதனால்தான் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் எதிர்நிலைகளின் போராட்டத்தையும் அவற்றின் ஒருமையையும் கொண்டிருக்கின்றன.

ஒரு நிகழ்வினுடைய வளர்ச்சிக்கு அடிகோலுகின்ற போராட்டம் இங்கே தலைமையான பாத்திரத்தை வகிக் கிறது. இந்தப் போராட்டம் பொருட்கள் மற்றும் நிகழ்வு களின் எல்லாக் கட்டங்களிலும் நடைபெறுகிறது. அது அத்தகைய ஒற்றுமையின் ஒவ்வொரு தோற்றத்திலும் அதன் சுற்றுவட்டத்திற்குள்ளேயும் நடைபெறுகிறது. போராட்டம் ஒற்றுமையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் இன்றியமையாததாக்குகிறது. இந்த ஒற்றுமை நொறுங்கித் தகர்ந்து புதிய ஒற்றுமைக்கு வழி வகுக்கின்ற பொழுது அது குறிப்பிடத்தக்க தீவிரமான வடிவங்களை அடைகிறது. எதிர்நிலைகளின் போராட்டம் பழைய ஒற்றுமை சீர் குலைவதற்கும் அதற்குப் பதிலாகப் புதிய நிலைமைகளுக்குப் பொருத்தமான புதிய ஒற்றுமை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது.

எதிர்நிலைகளின் ஒற்றுமை போராட்டத்தைப் போன்ற தல்ல, அது தற்காலிகமாக மட்டுமே இருக்கிறது. ஒற்றுமை போராட்டத்தின் விளைவாகத் தோன்றி அது பிணைக்கப் பட்டிருக்கின்ற முரண்பாடு முதிர்ச்சியடைந்து தீர்வு நிலையை அடைகின்ற வரை நீடித்த பிறகு, ஒரு புதிய ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த ஒற்றுமையின் எதிர்நிலைகளின் போராட்டத் தின் விளைவாக அது தகர்கிறது, அதன் பிறகு மற்றொரு ஒற்றுமை ஏற்படுகிறது, அதன் பிறகு நான்காவது ஒற்றுமை ஏற்படுகிறது, இப்படியே முடிவில்லாமல் நடைபெறுகிறது.

முரண்பாடுகள், எதிர்நிலைகளின் போராட்டம் எல்லா நிகழ்வுகள், நிகழ்வுப் போக்குகளின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உள் தோற்றுவாயாக இருக்கின்றன. உள் சக்திகளின் மூலம் பருப்பொருள் வளர்ச்சியடைகிறது; அது தனக்குள்ளே இந்த இயக்கத்தின் தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது.

இயக்கவியல் முரண்பாடுகளை எதிர்நிலைகள் ஒன்றை யொன்று முன்வைத்து, அதே சமயத்தில் ஒன்றையொன்று நிராகரிக்கின்ற பொழுது அவற்றின் இடையுறவு மற்றும் இடைத் தொடர்பு என்று தொகுத்துரைக்க முடியும். அவற்றுக்கு இடையிலான போராட்டமே வளர்ச்சியின் இயக்குச் சக்தியாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறது, எதிர்நிலைகளின் ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் விதி இயக்கவியலின் மிக முக்கியமான குணாம்சங்களில் ஒன்றை வெளியிடுகிறது: இயக்கமும் வளர்ச்சியும் சுய இயக்கம், சுய வளர்ச்சி என்ற முறையில் நடைபெறுகின்றன.

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை. எந்தப் பொருளுக்கும் அதை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற பண்பு உண்டு. அதற்கு ஒரு அளவுநிலை, அதாவது பரி மாணம் மற்றும் எடை இருக்கிறது.

அளவுநிலையும் பண்புநிலையும் நெருக்கமாக இணைந் திருப்பவை; அவற்றைப் பிரிக்க முடியாது. அதே சமயத்தில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. பண்புநிலை மாற்றம் பொருளை மாற்றுகிறது. அது மற்றொரு பொரு ளாக மாறுவதற்கு இட்டுச் செல்கிறது. அளவுநிலை மாற்றங் கள் பொருளை உடனடியாக மாற்றிவிடுவதில்லை. உதார ணமாக, உலோகத்தின் வெப்ப நிலையைப் பத்து டிகிரிகள் - நூறு டிகிரிகள் கூட- அதிகப்படுத்த முடியும். எனினும் அது உடனே உருகி விடுவதில்லை. வெப்ப நிலை உச்ச கட்டத்தை, உருகு நிலையை அடைகின்ற வரை அது தன்னுடைய பெளதிக நிலையில் மாற்றமில்லாதிருக்கிறது; உருகு நிலையை அடைந்தவுடன் கடினமான பொருள் ஒரு திரவமாக மாறுகிறது. திரவம் கொதி நிலையை அடைகின்ற பொழுது வாயுவாக மாறுகிறது. இவ்விதத்தில் அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் இடையீடில்லாமலும் படிப் படியாகவும் நடைபெறுகின்றன. பண்பு ரீதியான மாற்றங் கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாய்ச்சலைப் போல் நடைபெறுகின்றன. இயற்கையிலும் சமூகத்திலும் வளர்ச்சி மெதுவான பரிணாமம், வேகமான பாய்ச்சல்கள் என்னும் இரண்டு வடிவங்களில் நடைபெறுகின்றது.

அளவுநிலை மாற்றம் பண்புநிலை மாற்றமாகப் பரிணமிக் கின்ற நிகழ்வுப் போக்கு, ஒரு பொருள் அல்லது நிகழ்வு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல் பாய்ச்சல் எனப்படும். பண்புநிலை மொத்தமாக, உடனடியாக மாறு கின்ற பொழுது (உதாரணமாக, இரசாயனக் கிரியைகள் அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்) பாய்ச்சல் மிகவும் திடீரென்று நடைபெறக் கூடும். ஒரு பண்புநிலை மற்றொரு பண்புநிலையாகப் படிப்படியாக மாறுகின்ற பொழுது அது மெதுவாக நடைபெறக் கூடும் (உதாரண மாக, தாவரங்கள் பிராணிகளின் புதிய ரகங்கள் தோன்று தல்). இந்த உதாரணத்தில் பழைய பண்புநிலை புதிய பண்புநிலையாக உடனடியாக, முற்றாக அல்லாமல் பகுதி பகுதியாக மாறுகிறது; பழைய பண்புநிலையின் சில கூறுகள் அழிகின்றன; அவற்றுக்குப் பதிலாகப் புதிய பண்புநிலையின் கூறுகள் ஏற்படுகின்றன.

இந்த ரகத்தைச் சேர்ந்த பாய்ச்சலைப் பழைய பண்பு நிலையின் சுற்றுவட்டத்துக்குள் படிப்படியாக நடைபெறு கின்ற கூறுகளின் அளவு ரீதியான அதிகரிப்புடன் சேர்த்துக் கருதக் கூடாது.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடையின் விதி என்பது ஒரு பொருளின் அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான அம்சங்களின் இடைத் தொடர்பும் இடைச் செயலும் ஆகும், அங்கே சிறிய, ஆரம்பத்தில் புலனறியப்பட முடியாத, அளவு ரீதியான மாற்றங்கள் படிப்படியாகச் சேர்ந்து அடிப்படையான பண்புநிலை மாற்றங்களை ஏற் படுத்துகின்றன; அவை பாய்ச்சலில் நடைபெற்று பொருளின் இயல்பு மற்றும் அதன் வளர்ச்சியின் நிலைமை வற்புறுத்துகின்ற வடிவத்தை அடைகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தலைப் பற்றிய புறநிலையான விதி பொருளாயத உலகத்தைப் புத்திளமையாக்குவதைக் குறிக் கிறது; அங்கே ஒவ்வொரு பாய்ச்சலும் பழமையை ஒழித்துப் புதுமையைத் தோற்றுவிக்கிறது.

நிலைமறுப்பின் நிலைமறுப்பு

நிலைமறுப்பின் நிலைமறுப்பு. முந்திய நிலையை நிலைமறுப்புச் செய்கின்ற பொழுது மட்டுமே பண்புநிலை மாற்றம் சாத்தியம், நிலைமறுப்பு எந்த வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத, முறைப்படியான கட்டமாகும். இருத் தலின் பழைய வடிவங்களை நிலைமறுப்புச் செய்யாமல் எத்தகைய வளர்ச்சியும் சாத்தியமல்ல; ஏனென்றால் அப்படி நடைபெறும் பொழுது புதிதாக எதுவும் தோன்றாது என்பது இதற்குக் காரணமாகும். நிலைமறுப்பு என்றால் என்ன?

இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின்படி நிலைமறுப்பு என்பது பழையனவற்றை முற்றிலும் ஒழித்தல் என்று அர்த்தமல்ல. முதலாவதாக, எளிமையான நிகழ்வு கள் அதிகச் சிக்கலான நிகழ்வுகளுடன் சேர்ந்தே இருக் கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் 1.1ல் பழங் காலத்து உயிரிகள் மிகவும் அமைப்பு ரீதியான பிற்காலத்துப் பிராணிகளுடன் சேர்ந்து வாழ்கின்றன. இரண்டாவதாக, ஏறுமுக வளர்ச்சி நிகழ்வுப் போக்கின் போது புதியவை பழையனவற்றிலிருந்து தோன்றுகின்ற பொழுது அவற்றிலிருக்கின்ற ஆக்கபூர்வமான மதிப்புடை யவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் ஒவ்வொரு புதிய உயிரினமும் பரிணாம வளர்ச்சியின் போது முந்திய தலைமுறைகள் திரட்டிய ஆக்கபூர்வமான, மதிப்புடைய குணாம்சங்களைப் புனருற்பத்தி செய்து கொள்கிறது. மனித சமூக வரலாற்றிலும் கூட ஒவ்வொரு புதிய சமூக அமைப் பும் முந்திய சகாப்தங்களில் தோற்றுவிக்கப்பட்ட பொரு ளாயத, கலாசார மதிப்புகளை சுவீகரித்துக் கொள்கிறது.

நிலைமறுப்பு இணைப்பை, வளர்ச்சியின் தொடர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறது. நிலைமறுப்பின் விளைவாகத் தோன்றுகின்ற புதிய நிகழ்வு முந்திய கட்டத்தின் சாதனை களைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது, அதே சமயத்தில் ஏதோ புதிய ஒன்றாக, சாரத்தில் வளமான ஏதோ ஒன்றாக வெளிவருகிறது. நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி வளர்ச்சியின் ஏறுமுகத் தன்மையை, கீழ்நிலையானவற்றி லிருந்து உயர்நிலையானவற்றுக்கு, எளிமையானவற்றி லிருந்து சிக்கலானவற்றை நோக்கி முன்னேறிச் செல்வதை விளக்குகிறது.
                  (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment