Sunday 21 July 2019

9. உண்மை என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உண்மை பற்றிய கோட்பாடு. உண்மை என்பது ஒரு பொருள் மற்றும் நிகழ்வைப் பற்றிய அறிவு; அது எதார்த்தத்துடன் பொருந்தியிருக்கிறது, உண்மையான நிலையைப் பிரதிபலிக் கிறது. உண்மையான அறிவு எதார்த்தத்துடன் பொருந்தி யிருப்பதால் அது தனி மனிதரையோ, மனித சமூகத் தையோ பொறுத்திருக்கவில்லை''. (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 122. ) உண்மையான அறிவு நம்மிலிருந்து புறநிலையாக, சுயேச்சையாக இருக்கின்ற வெளியுலகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அறிவு புறநிலையான உண்மை எனப்படும்.

புறநிலையான உண்மை மாறாதிருக்க முடியாது; ஏனென்றால் அதன் தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கிறது, எப்பொழுதும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக் கிறது. ஆனால் நம்முடைய அறிவில் பிரதிபலிக்கப்படுகின்ற பொருள் மாறுகிறது என்றால், அது ஒரு பண்பு ரீதியான நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடைகிறது என்றால், அது தன்னுடைய இயல்புகள், தொடர்புகள் சிலவற்றை இழந்து வேறு சிலவற்றை உருவாக்கிக் கொள்கிறது என் றால் இப்பொருளைப் பற்றிய நம்முடைய அறிவும் மாறாமல் இருக்க முடியாது. முடிவான உண்மையாக இருப்பதற்குக் குறிப்பிட்ட பொருளைப் பற்றி நம்முடைய அறிவும் மாற வேண்டும், கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மாறுகின்ற எதார்த் தத்துடன் பொருந்தும்படிச் செய்யப்பட வேண்டும், அதனால்தான் புறநிலையான உண்மை சார்புநிலையாக இருக்கிறது. அது சமூக அறிவின் வளர்ச்சியுடன் சேர்ந்து, மாறுகின்ற எதார்த்தம் மற்றும் தன்னுடைய இருத்தலின் நிலைமைகளுடன் சேர்ந்து தவிர்க்க முடியாதபடி மாறு கிறது. எதார்த்தத்துடன் அரைகுறையாகப் பொருந்துகின்ற தம்முடைய அறிவு, அதாவது அறிதல் செயல்முறையின் போது இன்னும் அதிகத் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டிய அறிவு சார்புநிலை உண்மை எனப்படும்.

ஆனால் நம்முடைய அறிவின் சார்புநிலையான தன்மை) தனிமுதலான உண்மை என்பதை இல்லாமற் செய்து விடவில்லை. ஏனென்றால் சார்புநிலையானதில் தனிமுத லான அம்சம் இருக்கிறது. புறநிலையான உண்மை சார்பு நிலையாகவும் இருக்கிறது, தனிமுதலாகவும் இருக்கிறது. அது எதார்த்தத்தின் சில அம்சங்களையும் அதற்குள்ளே இருக்கின்ற சில உறவுகளையும் சரியாகப் பிரதிபலிக்கின்ற படியால் தனிமுதலானது. அதே சமயத்தில் அது எதார்த் தத்தைப் பூரணமாகவும் முழுமையாகவும் ஒரு போதும் பிரதி பலிப்பதில்லை, குறிப்பிட்ட பொருளின் மொத்த உள் ளடக்கத்தை (அது முடிவில்லாதது) தழுவவில்லை - தழுவ முடியாது என்பது மெய்யே -என்பதால் சார்புநிலையானது.

நம்முடைய அறிவு எப்பொழுதுமே சார்புநிலையானது என்று கூறுகின்ற பொழுது அது புறநிலையானது அல்ல, ஆகவே அது தனிமுதலானது அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது. சரி .மனித சிந்தனை தன் இயல்பு காரணமாகச் சார்புநிலையான உண்மைகளின் கூட்டு மொத்தமாகிய தனிமுதலான உண்மையைக் கொடுக்க முடியும், அது அப்படிக் கொடுக்கிறது. அறிவியல் வளர்ச்சியரின் ஒவ்வொரு காலடியும் தனிமுதலான உண்மை என்னும் மொத்தத்தில் புதிய கூறுகளைச் சேர்க்கிறது; ஒவ்வொரு அறிவியல் கருதுகோளின் மெய்ம்மையின் வரையறைகளும் சார்பு நிலையானவை, அவை அறிவின் வளர்ச்சியுடன் ஒரு சம்யத்தில் விரிவடைகின்றன, மறு சமயத்தில் குறுகிவிடுகின்ன.
                (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)


No comments:

Post a Comment