Monday 22 July 2019

5) வர்க்கப் போராட்டம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


வர்க்கப் போராட்டம் - சமூக வளர்ச்சியின் தோற்றுவாய். வர்க் கங்கள் என்றால் என்ன, அவை எப்படித் தோன்றின் என்னும் கேள்விகளை மக்கள் நெடுங்காலமாகவே சிந்தித்து வந்திருக்கிறார்கள். வர்க்க ஏற்றத்தாழ்வு நெடுங்காலத் திலிருந்தே இருந்து வந்திருக்கிறது, அது ஒருபோதும் மறையாது, கடவுள் செல்வர்களையும் ஏழைகளையும் நிரந் தரமாகப் படைத்திருக்கிறார் என்று சுரண்டுபவர்கள் போதிக்கிறார்கள்.

சமூகத்தில் ஏழைகள், செல்வர்கள், சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் பிரிவினை வர்க்கப் பிரிவினை ஆகும். சமூகத்தில் ஒரு பகுதியினர் நிலத்தை உடைமையாக வைத்திருக்கிறார்கள், மறு பகுதியினர் அந்த நிலத்தில் பாடுபடுகிறார்கள் என்றால் அங்கே இரண்டு பகை வர்க்கங் கள் - நிலக்கிழார்கள் மற்றும் விவசாயிகள் - இருக்கின்றன என்று அர்த்தமாகும். மக்களில் ஒரு பிரிவினர் பாக்டரிகளை யும் தொழிற்சாலைகளையும் உடைமையாகக் கொண்டிருக் கின்ற பொழுது, மறு பிரிவினர் அவற்றில் பாடுபடுகின்ற பொழுது நாம் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு வர்க்கங்களைப் பார்க்கிறோம். முதலாளிகள் தொ ழிலாளர்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியை சுவீகரிக்கிறார்கள். உற்பத்திச் சாதனங்களின் பால் தமக்கு இருக்கின்ற வேறுவிதமான உறவை ஆதாரமாகக் கொண்டு மக்களில் ஒரு பிரிவினர் மற்றவர்களுடைய உழைப்பை சுவீகரித்துக் கொள்கின்ற பொழுது அந்த மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் எனப்படும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் உற்பத்திச் சாதனங்கள் பாலான தம்முடைய உறவினால், உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் தாங்கள் வகிக்கின்ற பாத்திரத்தினால், பொதுச் செல்வத்தை சுவீகரிக்கின்ற முறையினால், அதன் அளவினால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற மக்கட் குழுக்கள் வர்க்கங்கள் ஆகும்.

வர்க்கங்கள் எப்பொழுதும் இருந்திருக்கின்றனவா, அவை எப்பொழுதும் இருக்குமா? வர்க்கங்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. பூர்விக சமூக அமைப்பில் மக்கள் சமத்துவ உரிமைகளைக் கொண்டு சிறு சமூகங்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் கூட்டாக உழைத்தார்கள், தங்களிடமிருந்த எல்லா வற்றையும் பொதுவாக வைத்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தாலும் அது எல்லோருடைய உடைமையாக வும் இருந்தது. எல்லோரும் அதைச் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் பொருளாதார வளர்ச்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தபடியால் மனிதனுக்கு மிகக் குறைவான உணவே கிடைத்தது; அது அவன் உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இத்தகைய நிலைமை களில் ஒரு நபர் மற்றொருவரைச் சுரண்டி அவருடைய உழைப்பில் வாழ்க்கை நடத்த முடியாது.

கம்யூனிசத்தின் கீழ் வர்க்கப் பிரிவினைகள் மறைந்துவிடும். ஒரு சமயத்தில் லெனின் சொற்பொழிவாற்றச் சென்ற அரங்கத்தில் “தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி நிரந்தரமாக இருக்கும்'' என்று எழுதப்பட்ட சுவரொட் டியைப் பார்த்தார். இந்தக் கோஷம் தவறானது என்பதை லெனின் அக்கூட்டத்தில் விளக்கினார். தொழிலாளர்களது இலட்சியம் வர்க்கம் என்ற முறையில் தங்களை நிரந் தரமாக்கிக் கொள்வது அல்ல, வர்க்க வேறுபாடுகளை ஒழித்து, வர்க்கமற்ற சமூகத்தை, கம்யூனிசத்தை நிர் மாணிப்பதே அவர்களுடைய இலட்சியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

வர்க்கங்கள் முதலில் எப்பொழுது, எப்படித் தோன்றின? வர்க்கமற்ற பூர்விக சமூகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது; அக்காலத்தில் மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைந்து பூர்விக சமூகத்தின் வாழ்க்கை முறை மாறியது. காலப் போக்கில் பூர்விக சமூகத்தில் படி.வரிசை நிலை ஏற்பட்டது. சிலர் செல்வர்களானார்கள்; நிலத்தை, கால் நடைகளை, உற்பத்திக் கருவிகளைக் கைப்பற்றித் தம்முடையதாக்கிக் கொண்டார்கள். உடைமை இல்லாத மற்றவர்கள் செல்வர் களுக்குப் பணிந்து உழைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது; அவர்கள் படிப்படியாக செல்வர்களுடைய அடிமைகளாக மாறினார்கள்.

நிலம், காடுகள், நீர், உழைப்புக் கருவிகளில் தனியுடைமை இப்படி உருவாயிற்று. பிரெஞ்சுத் தத்துவஞானியும் எழுத்தாளரும் அறிவியக்கவாதியுமான ழான் மாக் ரூஸேT (1712-1778) முதன்முதலாக நிலத்தில் வேலியமைத்து "இது என்னுடைய நிலம்!'' என்று கூறியவர் களைப் பற்றிக் கடுஞ்சீற்றத்துடன் பேசினார். தனியுடைமையும் அதன் விளைவாகிய ஆபத்துகளும் துன்பங்களும் சில தனி நபர்களது தீய எண்ணங்களால் தோன்றின என்று அவர் கருதியது ஓரளவுக்கு வெகுளித்தனமே. எனினும் அதில் சிறிதளவு உண்மை உண்டு. தனியுடைமை வர்க்கங் களைத் தோற்றுவித்தது; சமூகத்தை ஆண்டாலும், அடிமை யும், ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் என்ற பகைமை யான இரண்டு வர்க்கங்களாகப் பிரித்தது.

ஒவ்வொரு பகையியல் சமூகத்திலும் அடிப்படையில் எதிரெதிரான இரண்டு வர்க்கங்கள் இருப்பதும் அவை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுவதும் குணாம்சங் களாகும். உதாரணமாக, அடிமை உடைமைச் சமூகத்தில் அடிமைகளும் அடிமை உடைமையாளர்களும் இருந்தார்கள்; நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலக்கிழார்களும் விவசாயிகளும் இருந்தார்கள்; முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு எதிர்நிலையான வர்க்கங்கள் இருக்கின்றன. மனித சமூகம் பகைமையான வர்க் கங்கள் தோன்றிப் பிளவுற்ற கால் முதலாகவே மனித சமூக வரலாறு என்பது ஒடுக்குபவர்களை எதிர்த்து ஒடுக்கப் பட்டவர்களின் தீவிரமான போராட்டத்தின் வரலாறாக இருந்தது. சோஷலிசம் வெற்றியடைகின்ற வரை இந்த நிலை நீடித்தது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்கள் தம்முடைய விடுதலைக்குப் போராடுகின்றன. சுரண்டுபவர்கள் தம் முடைய செல்வத்தையும் அதிகாரத்தையும் இழக்க விரும்புவது இல்லை. அவர்கள் மெய்யாகவே என்ன செய்கிறார்கள் என்றால் உழைக்கும் மக்களை இன்னும் அதிகமாக அடிமைப்படுத்தி அதன் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கே பாடுபடுகிறார்கள்.

''சுதந்திரம் உடை யோனும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலேபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணை யடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண் டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங் கமாகவும் இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்கள் து பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று" என்று மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 191.)

சுரண்டல் அமைப்பின் கீழ் வர்க்கங்களுக்கு இடையில் போராட்டம் சமூக வளர்ச்சியின் விதியாக, சமூக முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த இயக்கு சக்தியாக இருக்கிறது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்களின் புரட்சிகரமான போராட்டம் பழைய, காலாவதியான எல்லாவற்றையும் அகற்று கிறது, அதே சமயத்தில் புதியனவற்றுக்கு, முற்போக் கானவற்றுக்குக் களத்தைச் சுத்தமாக்குகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் அடிமை முறை நிலவிய பொழுது ஸ்டார்ட்ட கஸ்) தலைமையில் அடிமைகள் கலகம் செய்தது அத்தகைய போராட்டங்களில் ஒன்றாகும். 16ஆம் நூற்றாண்டில் ஜெர் மனியில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர், 14-15ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் நடைபெற்ற ஜாக் கெரி, 18ஆம் நூற்றாண்டில் ருஷ்யாவில் (நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்) புகச்சோவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போர், பிரான்சில் முதலாளித்துவ அமைப்பை நிறுவிய, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சி, உலகத்தில் சோஷலிச சகாப்தத்தைத் தொடக்கிய ருஷ்யாவின் மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சி ஆகியவை மற்ற உதாரணங் களாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment