Sunday 21 July 2019

7. இயக்கவியலின் கருத்தினங்கள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


இயக்கவியலின் கருத்தினங்கள். வேறு எந்த விஞ்ஞானத்தை யும் போல பொருள்முதல்வாத இயக்கவியல் விதிகளின் அமைப்பு மட்டுமல்ல, அது தத்துவஞானக் கருத்தினங்களின், அதாவது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் பொதுவான கூறுகளையும் தொடர்புகளையும், அம்சங்களையும் இயல்பு களையும் தொகுத்துக் கூறுகின்ற கருத்தமைப்புகளின் அமைப்பாகவும் இருக்கிறது.

இனி இயக்கவியலின் கருத்தினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தனியானதும் சிறப்பானதும் பொதுவானதும். ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அவற்றுக்கு உரிய தனி வகையான, உள்ளுறையான கூறுகளைக் கொண்டிருக்கின்றன. எல்லா அம்சங்களிலும் முற்றான ஒருமையைக் கொண்டிருக்கின்ற இரண்டு பொருட்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருக்கின்ற, மற்ற நிகழ்வுகளில் இல்லாத அனைத்தும் தனியானவை எனப்படும். அதே சமயத்தில் மற்ற பொருட்கள், நிகழ்வுகளுடன் பொதுப்படையான எக்கூறுகளையும் கொண்டிராத பொருட்கள், நிகழ்வுகள் கிடையாது. ஒரு நிகழ்வில் மட்டுமின்றி பல நிகழ்வுகளில் இருக்கின்ற. திரும்பத் திரும்பத் தோன்றுகின்ற கூறுகள் பொதுவானவை எனப் படும். ஒரு பொருளை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் நாம் இனங்காணுகிறோம். ஒப்பிடத்தக்க பொருட்களை வேறுபடுத்திக் காட்டுபவை அவற்றிலுள்ள சிறப்பம்சம் எனப்படும். இயற்கையில் அடிக்கடி காணப்படுகின்ற இரும்பை உதாரணமாக எடுத்துக் கொள்வோம், உயிரற்ற இயற் கையின் கூறு என்ற முறையில் அதைப் பொதுவான நிகழ்வு எனக் கருதலாம்; உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது; இரும்பு என்ற வகையில் அது தனியான து. பனித சமூகத்தில் சமூகப் புரட்சி ஒரு பொது நிகழ்வு; தேசிய விடுதலைப் புரட்சியைப் புரட்சியின் சிறப்பான ரகம் எனக் கருதலாம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடைபெற்றிருக்கின்ற அதே புரட்சியைத் தனியான நிகழ்வு என்று கூறலாம்.

தனியானவை, பொதுவானவை, சிறப்பானவை ஆகி யவை ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தனியான து பொது அம்சத்தைக் கொண்டிருக்கிறது. பொதுவானது சிறப்பானதில், சிறப்பானதன் மூலமாக மட்டுமே இருக்கிறது.

காரணமும் விளைவும், ஒரு நிகழ்வை ஏற்படுத்துகின்ற மற்றொரு நிகழ்வு முந்திய நிகழ்வுக்குக் காரணம் எனப் படும். அந்தக் காரணத்தின் முடிவுதான் விளைவாகும். காரணகாரியத் தன்மை என்பது நிகழ்வுகளுக்கு இடையி லுள்ள உள்தொடர்பாகும்; அதில் ஒன்று நடைபெற்றவுடன் அடுத்தது உடனடியாகத் தொடர்கிறது, உதாரணமாக,
நீரைச் சூடாக்குதல் அது நீராவியாக மாறுவதற்குக் காரணம்; ஏனென்றால் நீரின் வெப்பநிலை அதிகரிக்கின்ற பொழுது அது மேன்மேலும் ஆவியாகிறது.

காரணகாரியத் தன்மை பொதுவான தன்மையைக் கொண்டிருக்கிறது. காரணம் இல்லாத நிகழ்வு அல்லது சம்பவம் கிடையாது, அது ஏற்பட முடியாது. நாம் பல நிகழ்வுகளைச் சந்திக்கிறோம், அவை ஏற்படுகின்ற காரணம் இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பது உண்மையே. எனினும் அறிதல் செயல்முறையின் முன்னேற்றம் இக் காரணங்களை இனங்காணுவதற்கு நமக்கு உதவி செய்யும். பொருளாயத உலகம் மற்றும் பொதுப்படையாகப் பருப் பொருளின் எந்த வளர்ச்சியும் காரணங்களையும் விளைவு களையும் கொண்ட சிக்கலான முடிச்சாகும்.

இன்றியமையாமையும் தற்செயலும். ஒரு நிகழ்வின் உறுப்பு களின் உள்ளார்ந்த தன்மையினால் ஏற்படுகின்ற இயல்பு களும் தொடர்புகளும் இன்றியமையாதவை என்று கூறப்படு கின்றன. வெளிப்புற சந்தார்ப்பங்களின் தாக்கத்தினால் ஏற்படுகின்ற இயல்புகளும் தொடர்புகளும் தற்செயலானவை எனப்படும். உதாரணமாக, ஒரு முதலாளி இன்றியமையா மையின் காரணமாக ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார்; ஏனென்றால் தொழிலாளி இல்லாமல் முதலாளியினால் தொழிலை நடத்த முடியாது. ஆனால் அவர் இவான், பியோத்தர் அல்லது வேறு எந்தத் தொழி லாளியை வேலைக்கு அமர்த்துகிறார் என்பது தற்செய லானதாகும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நிச்சயமாக நடைபெறுவது இன்றியமையாதது எனப்படும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடியது அல்லது நடை பெறாமற் போவது தற்செயலானது எனப்படும். தற்செய லானவற்றில் சம்பவங்கள் கற்பனை செய்யப்படக் கூடிய எந்த முறையிலும் நடைபெறலாம். தற்செயலானது இன்றியமையாமையின் வெளிப்பாடாக, அதற்குத் துணை செய்வதாக இருக்கிறது.

சாத்தியமும் எதார்த்தமும். தகுந்த நிலைமைகளில் நடை பெறக் கூடியது சாத்தியம் எனப்படும். ஏற்கெனவே நடை பெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும். வேறு வார்த்தை களில் சொல்வதென்றால் எதார்த்தத்தில் இல்லாத ஆனால் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறக் கூடிய எதார்த்தத்தின் உள்ளுறையான ஆற்றலின் காரணமாக எதிர் காலத்தில் தோன்றக் கூடிய இயல்புகள், நிகழ்வுப் போக்குகள், பொருட்கள் ஆகியவற்றை நாம் சாத்தியம் எனக் கருதுகிறோம். சாத்தியம் நிறைவேறுகின்ற பொழுது எதார்த்தமாக மாறுகிறது. ஆகவே எதார்த்தத்தை நிறை வேற்றப்பட்ட சாத்தியம் என்றும் சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் வரையறுக்கலாம்.

சாத்தியங்கள் எதார்த்தமானவையாகவும் சூக்குமமான வையாகவும் இருக்கக் கூடும். எதார்த்தமான சாத்தியங்கள் விதிவழிப்பட்ட வளர்ச்சிப் போக்கை வெளியிடுகின்றன. இந்த சாத்தியங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான நிலைமைகள் மெய்யாகவே இருக்கின்றன (உதாரணமாக, சில வளர்முக நாடுகள் புதிய காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும் என்பதைப் போல). சூக்குமமான சாத்தியங்கள் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் எதார்த் தமாக மாறுவதற்கு உரிய நிலைமைகள் இல்லை; ஆனால் இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் தோன்றக் கூடும் (மனிதன் சூரிய மண்டலத்தில் உள்ள இதர கிரகங்களை ஆராய்வதைப் போல).

உள்ளடக்கமும் வடிவமும். எதார்த்தத்தில் எந்தப் பொருளும் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தின் ஒற்றுமையாக இருக்கிறது. பொருள்முதல்வாத இயக்கவியலின் கருத்தினம் என்ற முறையில் உள்ளடக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்விலுள்ள எல்லாக் கூறுகள், அவற்றின் இடைச்செயல் மற்றும் அவற்றின் மாற்றங்களின் கூட்டு மொத்தம் ஆகும். இந்த நிகழ்வில் உள்ளுறையாகவுள்ள இடைச்செயல்களும் மாற்றங்களும் முறைப்படியாக நடைபெறுகின்றன, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பையும் நிர்ணயிக் கப்பட்ட கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. உள்ளடக்கத்தின் பல்வித அம்சங்களுக்கும் இடையிலான, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பு, அதன் கட் டமைப்பு ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் வடிவமாக அமைகின்றன. வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடி யாதவை; அவை ஒற்றுமையில் மட்டுமே இருக்கக் கூடிய இரண்டு எதிர்நிலைகள், உள்ளடக்கம் வடிவத்தை நிர் ணயிக்கிறது. அது வடிவத்தைக் காட்டிலும் வேகமாக மாறுகிறது, சீக்கிரத்தில் இரண்டும் மோதுகின்றன. புதிய உள்ளடக்கம் பழைய வடிவத்தை உதறி விட்டுப் புதிய வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. வடிவம் உள்ளடக்கத் தின் மீது தாக்கம் செலுத்துகிறது. புதிய வடிவம் வளர்ச்சி யை விரைவுபடுத்துகிறது, பழைய வடிவம் அதைப் பின் னால் இழுக்கிறது.

சாராம்சமும் நிகழ்வும். பொருட்கள், நிகழ்வுகளின் வெவ் வேறு அம்சங்களைக் குறிக்கின்ற இரண்டு கருத்தமைப்புகள் ஆகும். சாராம்சம் என்பது ஏதாவதொரு பொருளின் இன்றியமையாத அம்சங்கள் மற்றும் தொடர்புகளின் மொத் தமாகும்; ஒரு நிகழ்வு என்பது இந்த அம்சங்கள் மற்றும் தொடர்புகள் மேற்பரப்பில் வெளிப்படுதல் ஆகும்; அது சாராம்சத்தின் பொருளை வெளிக்கொண்டு வருகிறது. சாராம்சம் நிகழ்வுடன் அங்கக ரீதியில் இணைக்கப்பட் (டிருக்கிறது, தனது உள்ளடக்கத்தை நிகழ்விலும் அதன் மூலமாகவும் மட்டுமே வெளிப்படுத்துகிறது. நிகழ்வு சாராம் சத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அது இல்லாமல் இருக்க முடியாது. லெனின் சாராம்சத்துக்கும் நிகழ்வுக்கும் இடையிலான இடையுறவை ஒரு ஆழமான, வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்; அதன் ஆழத்தையும் வேகத் தையும் கண்களுக்குத் தெரிகின்ற அலைகளையும் நுரையை யும் கொண்டுதான் மதிப்பிட முடியும். “…மேலே நுரை, கீழே ஆழமான நீரோட்டங்கள், ஆனால் அந்த நுரை கூட சாராம்சத்தின் வெளியீடே” (* V. 1. Lenin, Collected Works, vol. 38, p. 130. )
              (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment